28 கடைகளிலிருந்து RM2.13 மில்லியன் மதிப்பிலானப் பொருள்கள் பறிமுதல்! – சுங்கத்துறை!
- THINAGAREN SANGGAREN
- 28 Apr, 2026
ஏப்ரல் 28,
நெகிரி செம்பிலான்
மாநிலத்தில் சுங்கத் துறையினர் மேற்கொண்ட தொடர் சோதனையில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள், மதுபானங்கள், பட்டாசுகள் என
பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக நெகிரி செம்பிலான் சுங்கத் துறை இயக்குநர்
Muhammad Ilyas Queek
Abdullah தெரிவித்தார். மாநிலம் முழுவதும் உள்ள 28 கடைகளில்
சோதனை மேற்கொண்டதில் 35 முதல் 56 வயதுக்குற்பட்ட 26 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும்
2 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் நெகிரி செம்பிலான் சுங்கத் துறை
இயக்குநர் Muhammad Ilyas Queek Abdullah தெரிவித்தார்.
இச்சோதனையின் மூலமாக
12,331 லிட்டர் மதுபானங்கள் கொண்ட 26,375 கேன்களும் 96,879 சிகரெட்டுகளும் பறிமுதல்
செய்யப்பட்டிருப்பதாக நெகிரி செம்பிலான் சுங்கத் துறை இயக்குநர் Muhammad Ilyas Queek Abdullah தெரிவித்தார். மதுபானங்களையும் சிகரெட்டுகளையும் சந்தை விலையை விடவும் குறைவான
விலையில் விற்பனைக்குச் செய்யப்பட்டா பொதுமக்கள் சுங்கத்துறைக்குத் தகவல் தெரிவிக்க
வேண்டும் என நெகிரி செம்பிலான் சுங்கத் துறை இயக்குநர் Muhammad Ilyas Queek Abdullah கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



