19,800 லிட்டர் போலி மதுபானங்கள் பறிமுதல்! – KASTAM SABAH

top-news
FREE WEBSITE AD

கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி முதல் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கடத்தப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களைச் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகச் சபா சுங்கத்துறை இயக்குநர் SITI MANG தெரிவித்தார். Sepanggar துறைமுகத்தில் நடத்திய சோதனையில் மதுபானங்களுடன்  பல்வேறு வெளிநாட்டுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் வரி மதிப்பு RM360,979.00 ரிங்கிட் என கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுமார் 6 நாள்களாகக் காத்திருந்தும் சம்மந்தப்பட்ட kontenaவை யாரும் மீட்காத நிலையில் அதன் உரிமையாளரைத் தேடி வருவதாகவும் மலேசியாவுக்குள் இறக்குமதி செய்த நிறுவனத்திடமிருந்து போதிய ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாகவும்  சபா சுங்கத்துறை இயக்குநர் SITI MANG தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *