SEA விளையாட்டுகள் 2027: பதக்க இலக்கில் புதிய அணுகுமுறை ஆய்வு

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மார்ச் 20-

2027 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெறவுள்ள SEA விளையாட்டுகளுக்கான தேசிய அணியின் பதக்க இலக்கை நிர்ணயிக்கும் முறையில் புதிய அணுகுமுறை ஒன்றை அரசு பரிசீலித்து வருகிறது என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌபிக் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக பயன்படுத்தப்பட்ட மொத்த பதக்க எண்ணிக்கைக்குப் பதிலாக, குறிப்பாக தங்கப் பதக்க இலக்கை நிர்ணயிக்கும் யோசனை தற்போது விவாத நிலையில் இருப்பதாக அவர் கூறினார். இந்த மாற்றம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் விளக்கினார்.

“இது குறித்து இன்னும் கலந்தாலோசனை நடைபெற்று வருகிறது. தங்கப் பதக்க இலக்கை தனியாக நிர்ணயிப்பதா அல்லது மொத்த பதக்க இலக்கை தொடர்வதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், எந்தவொரு இலக்கும் அறிவிக்கப்படும் போது அது வீரர்களுக்கு தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்பதையும் அமைச்சர் வலியுறுத்தினார். குறிப்பாக, வீரர்களின் மனநிலை மற்றும் உற்சாகத்தைப் பாதிக்காத வகையில் திட்டமிடுவது முக்கியம் என அவர் கூறினார்.

இந்த புதிய அணுகுமுறை, மலேசிய அணியின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *