Putra Heights Petronas தீ விபத்தில் 25 பேர் பாதிப்பு! சுகாதார மையமாக்கப்பட்ட கோயில்!

- Sangeetha K Loganathan
- 01 Apr, 2025
ஏப்ரல் 1,
இன்று காலை சிலாங்கூர் Putra Height பகுதியில் உள்ள Petronas எரிவாயு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 25 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.10 மணிக்குத் தீ விபத்துக் ஏற்பட்டதாகவும், 11.30 மணிவரையில் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து காயங்களுடன் 25 பேர் மீட்கப்பட்டிருப்பதாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Wan Md Razali Wan Ismail தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 25 பேருக்கும் உடனடி சிகிச்சைகள் வழங்க Putra Heights பகுதியில் அமைந்துள்ள Sri Maha Mariamman கோயிலில் இடமளிக்கப்பட்டிருப்பதாகவும், கோயிலில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணுக்கடியில் புதைக்கப்பட்ட எரிவாயு குழாயிலிருந்து தீ பரவியதால் சுமார் 500 மீட்டர் சுற்றளவில் சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் சம்மந்தப்பட்ட பகுதியில் பொதுமக்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பரவியிருக்கும் பகுதிகளில் உள்ள குடியிருப்புவாசிகள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் காலை 11.30 மணி நிலவரப்படி தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Wan Md Razali Wan Ismail தெரிவித்தார்.
Kebakaran di stesen gas Petronas Putra Heights mencederakan 25 orang. Mangsa menerima rawatan di Kuil Sri Maha Mariamman. Jalan sekitar 500 meter ditutup, dan penduduk dipindahkan sementara. Pasukan bomba masih berusaha mengawal kebakaran sehingga 11.30 pagi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *