பிரேசிலை வீழ்த்தியது கனவிலும் நினைக்காத ஒன்று – ஹாலண்ட் உருக்கம்
- Surendran Sumdraraj
- 06 Jul, 2026
ஈஸ்ட் ரதர்ஃபோர்ட், ஜூலை 6 –
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 16-ஆவது சுற்றில் பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நார்வே அணியின் வெற்றி, தாம் வாழ்நாளில் கனவிலும் நினைக்காத ஒன்று என்று நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் ஹாலண்ட் இரண்டு கோல்கள் அடித்து நார்வேவின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். இதன் மூலம் நார்வே உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியது.
இந்த இரட்டை கோல்களின் மூலம் 25 வயதான ஹாலண்ட், நடப்பு உலகக் கோப்பையில் தனது மொத்த கோல் எண்ணிக்கையை ஏழாக உயர்த்தியுள்ளார். இதன் மூலம் தங்கக் காலணி விருதுக்கான போட்டியில் லியோனல் மெஸ்சி மற்றும் கைலியன் எம்பாப்பேவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
“இதுபோன்ற ஒன்று என் வாழ்நாளில் நடக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. இதை நம்பவே முடியவில்லை,” என்று ஹாலண்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நார்வேவின் இந்த வரலாற்று வெற்றி, உலகக் கோப்பை கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



