நேப்பாளுக்கு எதிரான போட்டிக்கு ஹரிமாவ் மலாயா தீவிர தயாரிப்பு

top-news

செய்தி-வெற்றி மைந்தன்

2027 ஆசிய கோப்பை தகுதிச் சுற்றின் முக்கியப் போட்டியான நேப்பாளுக்கு எதிரான ஆட்டத்திற்காக மலேசியாவின் ஹரிமாவ் மலாயா அணியின் பயிற்சியாளர் பீட்டர் லமோவ்ஸ்கி, பாதுகாப்பு நிலைக்கான 11 வீரர்களை தேசிய அணி முகாம் சேர அழைத்துள்ளார். இந்தப் போட்டி நவம்பர் 18 அன்று புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.

ஜொகூர் டாருல் தக்சிம் அணியின் முக்கிய நட்சத்திரமான மேத்தியூ டேவிஸ், முந்தைய அழைப்பை தவிர்த்திருந்தாலும், இந்த முறை தேசிய அணிக்கு திரும்பி வருகிறார். அவரது அனுபவமும் திறமையும் அணியின் பாதுகாப்பை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அழைப்பு,  பிபாவின் தண்டனை சர்ச்சைக்குப் பிறகு வந்துள்ளது. பிபா, மலேசியாவின் சில வீரர்களின் தகுதி ஆவணங்களை தவறாகப் பதிவு செய்ததற்காக அபராதம் விதித்தது, ஆனால் அது அணியின் உறுதியை குறைக்கவில்லை. ஜூனியர் எல்ட்ஸ்டால், கார்பின் ஒங், அரிப் ஐமான் ஹனாபி ஆகியோர் தொடர்ந்து தேசிய அணியின் முகாமில் பங்கேற்கின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *