ஹிஷாமுட்டின், கைரி மீண்டும் சேர்வதால் UMNO மீது மக்களின் நம்பிக்கை திரும்பாது – இப்ராஹிம் அலி
- Surendran Sumdraraj
- 16 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 16-
குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்கள் மீண்டும் UMNO கட்சியில் சேர்வதால் மக்களின் நம்பிக்கை மீண்டும் பெறப்படும் என்ற கருத்தை Parti Bumiputera Perkasa Malaysia (PUTRA) தலைவர் டத்தோடாக்டர் இப்ராஹிம் அலி சந்தேகத்துடன் எதிர்கொண்டுள்ளார்.
டத்தோ ஸ்ரீ ஹிஷாமுட்டின் துன் ஹுசைன் மற்றும் கைரி ஜமாலுடின் ஆகியோர் மீண்டும் UMNOவில் சேர்வது, அந்தக் கட்சி எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
அம்னோ கட்சியின் உண்மையான பிரச்சினை, தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள நம்பகத்தன்மை மற்றும் நேர்மையின் குறைபாடே என அவர் கூறினார். அதனால், புதியோ பழையோ தலைவர்கள் மீண்டும் சேர்வது மட்டுமே மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க போதுமானதாக இருக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்கள் அம்னோ மீது நம்பிக்கையை இழந்ததற்கான முக்கிய காரணம், கட்சியில் திறமையான தலைவர்கள் இல்லாததாலா அல்லது தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள நேர்மை தொடர்பான பிரச்சினைகளாலா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் இப்ராஹிம் அலி கூறினார்.
மேலும், தற்போது அம்னோவை வழிநடத்தும் தலைவர் கடந்த காலத்தில் பல நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்தவர் என்பதையும் மக்கள் மறந்து விடுவார்களா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



