1MDB வழக்கு: நஜிப்பின் நிலை என்ன?

top-news

புத்ராஜயா, டிச. 26-

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் இன்று (டிசம்பர் 26) தனது கடைசி குற்றவியல் வழக்கின் தீர்ப்பைக் கேட்பார். இது 2.3 பில்லியன் தொகை தொடர்பான 1MDB ஊழல் வழக்கு ஆகும். விசாரணை புத்ராஜெயா உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

ஹாகிம் டத்தோ கொலின் லாரன்ஸ் செக்வெரா காலை 9 மணிக்கு தீர்ப்பை வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு SRC இன்டர்னேஷனல் வழக்கை விட மிகப் பெரியது. அங்கு நஜிப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனை குறைக்கப்பட்டு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால் 1MDB வழக்கு சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும், பொதுமக்கள் கருத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் நஜிப் 4 அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளையும், 21 பணமோசடி குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.

இந்த வழக்கு 7 ஆண்டுகளாக நடந்து வருகிறது. குற்றச்சாட்டுகள் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் இருந்தபோது 1MDB நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகும். குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் கூடுதல் ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கலாம். விடுதலை செய்யப்பட்டால் SRC தண்டனையைத் தொடர வேண்டும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *