மார்ச் 31 அன்று SPM 2025 தேர்வு முடிவுகள்
- Surendran Sumdraraj
- 09 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 9-
2025 ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் (SPM) தேர்வு முடிவுகள் வரும் மார்ச் 31 அன்று அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு (KPM) தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், நாடு முழுவதும் 3,350 தேர்வு மையங்களில் மொத்தம் 4,13,299 மாணவர்கள் SPM 2025 தேர்விற்கு பதிவு செய்திருந்ததாகக் கல்வி அமைச்சு தெரிவித்தது.
பள்ளி மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அதே நாளில் காலை 10 மணி முதல் தாங்கள் படிக்கும் பள்ளிகளில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் (பிரைவேட்) தேர்வு எழுதியவர்கள் தாங்கள் பதிவு செய்த மாநில கல்வி துறையைத் தொடர்புகொண்டு தங்களது தேர்வு முடிவுகளைப் பெறலாம் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
SPM தேர்வு மலேசியாவின் முக்கியமான தேசியத் தேர்வுகளில் ஒன்றாகும். இந்தத் தேர்வு முடிவுகள் மாணவர்கள் உயர்கல்வி மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகளை தீர்மானிக்கும் முக்கிய அடிப்படையாகக் கருதப்படுகின்றன.
எனவே, மாணவர்களும் பெற்றோர்களும் இந்த முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



