மனித உரிமைகளைப் பாதுகாக்க அரசு உறுதி – அசலினா
- Surendran Sumdraraj
- 07 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 7 –
மலேசிய அரசியலமைப்பு, சட்டத்தின் ஆட்சி, மக்களின் நலனுக்கு ஏற்ப மனித உரிமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், உறுதி செய்யவும் அரசு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவனச் சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசலினா ஒத்மான் சயீத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசிய அவர், அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்க மனித உரிமைகள் அடிப்படையாக விளங்குகின்றன என்றார்.
மேலும், நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் மனித உரிமைகளும் கூட்டாட்சி அரசியலமைப்பின் இரண்டாம் பகுதியின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும், அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் அந்தக் கொள்கைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
2024-ஆம் ஆண்டுக்கான மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (SUHAKAM) ஆண்டு அறிக்கை மற்றும் நிதி அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு அனைத்து தரப்பினரும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மனித உரிமைகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் அரசு, சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் அசலினா வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



