ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்க்க அரசு உறுதி
- Surendran Sumdraraj
- 04 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 4-
ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்க்க மலேசிய அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாக பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) டத்தோ ஸ்ரீ அசலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.
வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு மற்றும் அமலாக்க நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக பல்வேறு கொள்கைகள் மற்றும் முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) வழங்கிய பரிந்துரைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகவும், அவை பிரதமர் தலைமையிலான தேசிய நல்லாட்சி தொடர்பான சிறப்பு அமைச்சரவை குழு (JKKTN) மூலம் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் நல்லாட்சி முறையை வலுப்படுத்துவதும் ஊழலை முற்றிலும் ஒழிப்பதும் அரசின் முக்கிய முன்னுரிமையாக தொடர்ந்து இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
அதற்காக வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு மற்றும் அமலாக்க அமைப்புகளின் சுதந்திரத்தை உறுதி செய்யும் சிறப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



