EV சார்ஜிங் வசதிகளை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 8-

 நாட்டில் மின்சார வாகனங்கள் அல்லது EV பயன்பாட்டை விரைவுபடுத்தும் நோக்கில், அதற்கான கொள்கைகள் மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்களை அரசு மேலும் மேம்படுத்தி வருவதாக Timbalan Menteri Pelaburan, Perdagangan dan Industri, Sim Tze Tzin தெரிவித்தார்.

EV சூழலமைப்பை வலுப்படுத்துவதோடு, நாடு முழுவதும் சார்ஜிங் வசதிகளை அதிகரிப்பதும் அரசின் முக்கிய கவனமாக உள்ளது என்று அவர் கூறினார்.

இதற்காக, குறிப்பாக Tenaga Nasional Bhd (TNB) உட்பட பல்வேறு தரப்புகளுடன் அரசு இணைந்து செயல்பட்டு வருவதாகவும், EV சார்ஜிங் நிலையங்களுக்குத் தேவையான மின்சார விநியோகத்தை உறுதி செய்ய அதிகமான மின்துணை நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

நாடாளுமன்றத்தில்  நடைபெற்ற கேள்வி பதில் அமர்வில் பேசிய Sim Tze Tzin, சார்ஜிங் வசதிகளை அமைப்பதற்கு போதுமான மின்சார ஆதாரம் அவசியம் என்பதால், மின்துணை நிலையங்களின் கட்டுமானம் முக்கியமானது என்றார்.

மேலும், சார்ஜிங் வசதி இயக்குநர்களுக்கு ஊக்குவிப்புகள் வழங்குவது தொடர்பாக அரசு தற்போது ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தகைய ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டால், தனியார் துறையினரும் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

EV பயன்பாடு அதிகரிக்கும் சூழலில், மின்சார வாகன உரிமையாளர்களுக்கு எளிதான மற்றும் நம்பகமான சார்ஜிங் வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் எனவும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *