பன்றி வளர்ப்புக்கு அரசு எதிரல்ல; ஆனால் மக்களின் அமைதியை பாதிக்கும் இடங்களில் தொடரக் கூடாது – அன்வார்

top-news

புத்ராஜெயா, பிப். 9-

பன்றி வளர்ப்பை அரசு ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால், அந்த செயல்பாடு உள்ளூர் மக்களுக்கு பதற்றம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டால் அதைத் தொடருவது பொருத்தமல்ல என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், அரசின் கொள்கை நிலைப்பாடு தெளிவானது; பன்றி வளர்ப்பையோ அல்லது முஸ்லிம் அல்லாதவர்களின் உணவுப் பழக்கங்களையோ அரசு தடை செய்யவில்லை. எனினும், அந்த நடவடிக்கைகள் நடைபெறும் இடம் சமூகத்தின் உணர்வுகளையும் பொது அமைதியையும் கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்பட வேண்டும் என்றார்.

“பன்றி வளர்ப்பு விவகாரத்தில், உள்ளூர் மக்களுக்கு கவலை ஏற்படும் பகுதிகளில் அதைத் தொடரக் கூடாது என்ற கருத்துடன் நான் ஒப்புக்கொள்கிறேன்.

“தொடர விரும்பினால், மக்கள் வாழும் இடங்களிலிருந்து தொலைவில் உள்ள மாற்று இடங்களைத் தேர்வு செய்யலாம். கொள்கை ரீதியாக அரசு பன்றி வளர்ப்புக்கு எதிரல்ல; முஸ்லிம் அல்லாதவர்கள் பன்றி இறைச்சி உண்பதையும் தடை செய்யவில்லை,” என்று அவர் கூறினார்.

இன்று இங்கு நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றும் போது அன்வார் இந்த கருத்தை தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *