சாலைகளில் குழிகள், சேதங்களை சரிசெய்ய 3 பராமரிப்பு முறைகள் – பொதுப் பணி அமைச்சு

top-news

கோலாலம்பூர், பிப்.4 -

கூட்டாட்சி சாலைகளில் (Jalan Persekutuan) ஏற்படும் சேதமடைந்த மற்றும் குழி நிறைந்த சாலைகள் தொடர்பான பிரச்சினைகளை சமாளிக்க, பொதுப்பணிகள் அமைச்சு (KKR) மூன்று முக்கிய பராமரிப்பு முறைகளை நடைமுறைப்படுத்தி வருவதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

பொதுப்பணி துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் மஸ்லான், இந்த மூன்று முறைகளாக வழக்கமான பராமரிப்பு, காலாந்தர பராமரிப்பு, மற்றும் அவசர பராமரிப்பு ஆகியவை உள்ளன என கூறினார். இந்த பணிகள், நியமிக்கப்பட்ட கூட்டாட்சி சாலை பராமரிப்பு ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன என்றும் அவர் விளக்கினார்.

அவரின் கூற்றுப்படி, வழக்கமான பராமரிப்பு திட்டமிட்ட அட்டவணையின் அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. சிறிய சேதங்கள் பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு முன்பே தடுக்கும் நோக்கில் இது செய்யப்படுகிறது. குறிப்பாக, சாலைகளில் உருவாகும் சிறிய குழிகளை ஆரம்ப கட்டத்திலேயே அடைப்பது போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

இதற்கு மாறாக, காலாந்தர பராமரிப்பு என்பது சாலை மேற்பரப்பிலும், சாலை மேற்பரப்புக்கு அப்பாலான பகுதிகளிலும் முழுமையான மற்றும் விரிவான சீரமைப்புகளை உள்ளடக்குகிறது. இதன் மூலம் சாலையின் தரம் நீடித்திருப்பதோடு, பயணிகள் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *