ரந்தாவ் பாஞ்சாங்கில் பெட்ரோல் கடத்தல் முயற்சி – 3 தாய்லாந்து நாட்டினர் கைது

top-news
FREE WEBSITE AD

ரந்தாவ் பஞ்சாங், மார்ச் 27-

ரந்தாவ் பாஞ்சாங்கில் இன்று நடைபெற்ற ‘ஒப்ஸ் திரிஸ்’ (Ops Tiris) நடவடிக்கையின் போது, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இரு ஆண்களும் ஒரு பெண்ணும் பெட்ரோலைக் கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வாதாரச் செலவு அமைச்சின் (KPDN) கிளந்தான் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட இந்தச் சோதனையில், மொத்தமாக 15,619.20 வெள்ளி மதிப்புள்ள பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டது.

காலை சுமார் 7.30 மணியளவில், ரந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள குடிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகமான ICQS நுழைவாயிலில், மூவரும் தனித்தனியாக Proton Waja கார்களை ஓட்டிக்கொண்டு தாய்லாந்துக்குள் நுழைய முயன்றபோது தடுக்கப்பட்டனர்.

முதல் சம்பவத்தில், 53 வயதுடைய ஒருவர் 50 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஒரு கார் உடன் கைது செய்யப்பட்டார். அந்தப் பொருட்களின் மொத்த மதிப்பு 5,193.50 வெள்ளி ஆகும்.

இரண்டாவது சம்பவத்தில், 56 வயதுடைய மற்றொரு நபர் 60 லிட்டர் பெட்ரோல் மற்றும் வாகனத்துடன் கைது செய்யப்பட்டார். அதன் மொத்த மதிப்பு 5,232.20 வெள்ளி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீதமுள்ள பெண் சந்தேகநபர் தொடர்பான விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன. இந்தக் கடத்தல் முயற்சிகள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *