2026ஆம் ஆண்டில் மனிதநேயக் கல்வியை வலுப்படுத்தும் கல்வி அமைச்சு

top-news

புத்ராஜெயா, ஜன.14-

2026ஆம் ஆண்டை முன்னிட்டு, அனைத்து குழந்தைகளும் சமமான,  உரிய கல்வியைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் மனிதநேயக் கல்வியை வலுப்படுத்துவது கல்வி அமைச்சின் (KPM) முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் திறமையை முன்னிலைப்படுத்துவதோடு, சமூகத்தில் பின்தங்கிய,  வாய்ப்புகள் குறைவான மாணவர்களும் புறக்கணிக்கப்படாமல் கல்வி பெற வேண்டும் என்பதே அமைச்சின் அணுகுமுறையாகும்.

இந்த ஆண்டுக்கான முயற்சிகளில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை உள்ளடக்கிய புதிய மேம்பாடுகள், புதிய முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் உள்ளூர் சமூகங்களின் குரல்கள் கவனத்தில் கொண்டு கல்விக் கொள்கைகள் வடிவமைக்கப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது கல்வி அமைப்பை மேலும் உள்ளடக்கியதாகவும் சமநிலையுடனும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி அமைச்சர் படீலினா  சிடெக் கூறுகையில், பள்ளி சீர்திருத்தங்கள் மூலம் பெறப்படும் கருத்துகள் நடைமுறை நடவடிக்கைகளாக மாற்றப்படுவதே அமைச்சின் நோக்கம் என்றார். திட்டங்கள் வெறும் ஆவணங்களாக இல்லாமல், பள்ளிகளின் அன்றாட செயல்பாடுகளில் நேரடி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *