மத்திய கிழக்கு மோதலை காரணமாக்கி வீட்டு விலையை உயர்த்த வேண்டாம் – அமைச்சர் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, ஏப். 6-

மத்திய கிழக்கில் நிலவும் மோதலின் தாக்கத்தைக் காரணமாகக் கொண்டு, குறிப்பாக குறைந்த விலையில் வழங்கப்படும் வீடுகளின் விலையை உயர்த்தக் கூடாது என வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சரான ங்கா கோர் மிங் கட்டுமானத் துறை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், உலக சந்தையில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்திருந்தாலும், வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் (கேபிகேடி) மக்கள் வசதிக்கான வீடுகளின் விலையை நிலையாக வைத்திருக்க உறுதியாக செயல்பட்டு வருகிறது.

“உலகளாவிய நெருக்கடி மலேசியாவையும் பாதித்துள்ளது. எனினும், அதனை வாய்ப்பாகக் கொண்டு கட்டுமான செலவுகளை அதிகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்குக் கூட அரசு மாபெரும் உதவித் தொகையை வழங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசு மாதத்திற்கு சுமார் 4 பில்லியன் ரிங்கிட் செலவில் எரிபொருள் மானியத்தை வழங்கி வருவது, மக்கள் சுமையைக் குறைக்கும் முயற்சியாகும் என்று அவர் விளக்கினார்.

இதனால், கட்டுமானத் துறையினர் சமூக பொறுப்புடன் நடந்து கொண்டு, வீட்டு விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *