தொப்புள் கொடியுடன் பிறந்த குழந்தை, பாழடைந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டது!

top-news
FREE WEBSITE AD

Kuala krai பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டிலிருந்து பிறந்த குழந்தை மீட்கப்பட்டது. இரவு 9.43 மணிக்கு Kuala krai மாவட்டக் காவல் நிலையத்திற்குப் புகார் அழைப்பைப் பெற்றதாக Kuala krai மாவட்டக் காவல் ஆணையர் Mazlan Mamat தெரிவித்தார்.

அண்டை வீட்டார்கள் குழந்தையின் அழுகுரல் கேட்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மீட்புப் படையினரின் உதவியுடன் பாழடைந்த வீட்டிலிந்து 2.74 கிலோ கிராம் எடையில் தொப்புள் கொடியுடன் குழந்தை மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

உடனடியாக அருகிலுள்ள Sultan Ismail Petra மருத்துவமனையில் குழந்தையைச் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள சிராய்ப்பு காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பெற்றதாக Kuala krai மாவட்டக் காவல் ஆணையர் Mazlan Mamat தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *