கிறிஸ்டினா ஸ்ரீதரன் உயர்கல்விக்கு நான் பொறுப்பு! – Teo Nie Ching உறுதி!

top-news
FREE WEBSITE AD

Tangkak Johor Matriculation கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்புக் கிடைத்தும் வறுமையால் வாடுவதை உணர்ந்த துணை அமைச்சரும் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான Teo Nie Ching உடனடியாக அவரின் கல்விக்கு வேண்டிய உதவிகளைத் தனது தனிப்பட்ட நிதியின் மூலமாக வழங்கினார்.

கணவரை இழந்து தனித்து வாழும் தாயாரின் அரவணைப்பில் வளரும் கிறிஸ்டினா ஸ்ரீதரன் எந்தவொரு நிலையிலும் தனது கல்வியைத் தொடர தாம் உறுதுணையாக இருப்பதாகவும் Teo Nie Ching நம்பிக்கை அளித்தார்.

மாணவி கிறிஸ்டினா ஸ்ரீதரன் அவர்களின் தாயார் கூலாய் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார் என்பதையும் தாம் அறிந்துள்ளதாகவும், உயர்ந்த லட்சியங்களோடு, மிக உறுதியாக இருக்கும் இம்மாணவி நிச்சயமாக இன்னும் சிறப்பான பல சாதனைகளை அடைவார் என தாம் நம்புவதாகவும், இவரின் முயற்சியானது கூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மாணவர்கள் நாட்டின் கல்வி முறையிலிருந்து பின்தங்கிவிடாமல் இருப்பதையும், அவர்கள் தங்களின் உயர் கல்வியைத் தெடர்வதையும் உறுதி செய்யும். என Teo Nie Ching நம்பிக்கை அளித்தார்.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *