கட்டுமானத் துறையில் உண்மையான ஒப்பந்ததாரர்களை முன்னிறுத்த சிறப்பு மதிப்பீடு வேண்டும் - அஹ்மட் ஜாஹிட்

top-news

கோலாலம்பூர், டிச. 15-

மலேசியாவில் கட்டுமானத் துறையில் உண்மையாகவே செயல்பட்டு வரும் ஒப்பந்ததாரர்களை மட்டும் முன்னிறுத்துவதற்காக ஒப்பந்ததாரர்கள் மீது சிறப்பீடு (சாரிங்கன்) நடத்தப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சருமான அஹ்மட் ஜாஹிட், இத்தகைய நடவடிக்கை ஆரோக்கியமற்ற போட்டியைத் தவிர்த்து, துறையில் உண்மையான வீரர்களின் நீடித்த தன்மையைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்று கூறினார்.

"இந்த சிறப்பீடு கட்டாயம் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், நாம் தொடர்ந்து ஒருவருக்கொருவர் போட்டியிடுவோம். போட்டி சில சமயம் ஆரோக்கியமானது, ஆனால் பெரும்பாலும் ஆரோக்கியமற்றது" என்று அவர் தெரிவித்தார்.

PKMM போன்ற சங்கங்கள் மலாய் ஒப்பந்ததாரர்களின் நலன்களைப் பாதுகாத்து, துறையில் அவர்களின் பங்கை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியமற்ற போட்டி சிறு, நடுத்தர ஒப்பந்ததாரர்களை பாதிக்கும் என்பதால், அரசு சிறப்பீடு மூலம் தகுதியானவர்களை மட்டும் ஊக்குவிக்க வேண்டும் என்று அஹ்மட் ஜாஹிட் அழைப்பு விடுத்தார்.

கட்டுமானத் துறை மலேசிய பொருளாதாரத்தின் முக்கிய தூண் என்பதால், நியாயமான போட்டி, தரமான பணிகளை உறுதிப்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *