நடிகரும்,இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் இரு தரப்பினருக்கு இடையே மோதல்!

top-news
FREE WEBSITE AD

கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இசை நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தனர். ஹிப் ஹாப் ஆதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடல்களை பாடினர். இதனை அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு காவல் துறையினர் பாதுகாப்பும் வழங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இளைஞர்கள் நடனமாடும் போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு நிகழ்ச்சியில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த காவல் துறையினர் சண்டையிட்ட இளைஞர்களை ஒவ்வொருத்தராக சட்டையை பிடித்து இழுத்துச் சென்றனர். பின்னர் அவர்களை இசை நிகழ்ச்சியில் அனுமதிக்காமல் வெளியே அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவரை அடித்துக் கொள்ளும் காணொளி தற்போது வெளியாகி உள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *