பேராக்கில் திடீர் வெள்ளம்! 73 குடும்பங்கள் பாதிப்பு!

top-news
FREE WEBSITE AD

பேராக்கில் திடீர் வெள்ளம்! 73 குடும்பங்கள் பாதிப்பு!

பேரா மாநிலத்தில் பல இடங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், சில குடியிருப்பாளர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

பேராக் தெங்காவில், கம்போங் செராபோ மற்றும் கம்போங் புலு அகார் ஆகிய இரண்டு பகுதிகள் கனத்த மழையிந் காரணமாக வெள்ளத்தில் மூழ்கின. இதனை அடுத்து 209 பேர் கொண்ட 73 குடும்பங்கள், பாரிட்டில் உள்ள எஸ்கே சிம்பாங் 3 க்கு மாற்றப்பட்டனர்.

இரவு 9 மணியளவில் தற்காலிக தங்குமிடம் திறக்கப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

"இரண்டு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழைக்குப் பிறகு அந்தப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வடிகால் அமைப்பு நிரம்பி வழிந்தது, மேலும் அருகிலுள்ள மலைகளில் இருந்து கீழே பாய்ந்த தண்ணீர் நிலைமையை மோசமாக்கியது," என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *