சண்டக்கான் தீ விபத்தில் மூதாட்டி பலி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 19: சண்டக்கான்,  பத்து 12, ஜாலான் ஃபூக் ஹின் பகுதியில், இரட்டை மாடி வீடு நேற்று இரவு தீப்பிடித்ததில், 84 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இரவு 10.44 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் அந்த மூதாட்டியின் சடலத்தை வரவேற்பறையில் கண்டெடுத்தனர். அவரது உடல் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக சண்டக்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஜிம்மி லகுங் கூறினார்.

தீ விபத்து ஏற்பட்டபோது அவர் வீட்டிற்குள் சிக்கியிருந்தார், மேலும் அவரது உடல் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஊழியர்களால் மீட்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இரவு 8.38 மணிக்குத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், 13 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் ஜிம்மி தெரிவித்தார்.

இரவு 9.35 மணிக்குத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *