மலேசியாவுக்கு எல்நினோ எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 16: மலேசியாவில் ஜூன் முதல் ஜூலைக்குள் El Niño வானிலை மாற்றம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் Chung Jing Xiang எச்சரித்துள்ளார்.

இதனால் நாடு வழக்கத்தை விட அதிக வறட்சியான சூழ்நிலையை சந்திக்கக்கூடும் என்றும், இந்த நிலை அடுத்த ஆண்டு ஜனவரி வரை நீடிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது Pacific Ocean பகுதியில் La Niña நிலை காணப்பட்டாலும், அது படிப்படியாக சம நிலைக்கு மாறி பின்னர் El Niño கட்டத்துக்குச் செல்லும் அறிகுறிகள் இருப்பதாக அவர் கூறினார்.

El Niño காரணமாக:
• வெப்பமான மற்றும் வறண்ட காலநிலை அதிகரிக்கலாம்
• நீர்வள பற்றாக்குறை அபாயம் உருவாகலாம்
• திறந்த வெளி எரிப்புகள் அதிகரித்தால் புகைமூட்டம் (haze) மோசமடையலாம்

குறிப்பாக தென்மேற்கு பருவமழைக் காலத்தில், அண்டை நாடுகளிலிருந்து வரும் புகைமூட்டம் மேற்கு கடற்கரை மற்றும் சரவாக்கை பாதிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், உடலில் போதிய நீர் அளவை பராமரிக்கவும், திறந்த வெளி எரிப்புகளை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *