சட்டவிரோதக் குடியேறிகள் கைது! – 209 பாஸ்போர்ட்கள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப் 6: புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில், சட்டவிரோத குடியேற்ற முகவர் சிண்டிகேட்டின் மூளையாக கருதப்படும் மூன்று மலேசியர்கள் உட்பட ஐந்து வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

22 முதல் 42 வயதுக்குட்பட்டஐந்து பேரில், இந்திய ஆடவர் ஒருவர், ஒரு வியட்நாம் ஆடவர் ஒருவர், இரண்டு வியட்நாம் பெண்கள் மற்றும் ஒரு இலங்கைப் பெண் ஆவர் என்று குடிநுழைவுத்துறை இயக்குநர்  ரஸ்லின் ஜூசோ கூறினார்.

 

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள வெளிநாட்டினரை குறிவைத்து, விசாக்கள், சுற்றுலா பாஸ்கள் மற்றும் பணிக்கான பாஸ்கள் போன்ற பாஸ்போர்ட் சேவைகளை வழங்குவதன் மூலம் இந்த சிண்டிகேட் RM500 முதல் RM1,100 வரை கட்டணம் வசூலிப்பதாக அவர் கூறினார்.

 

இந்நிலையில் மொத்தம் 209 பாஸ்போர்ட்டுகளை  அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், நான்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *