கூலாய் ஆலயங்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்ந்து வழங்கப்படும்! – துணை அமைச்சர் தியோ உறுதி

top-news
FREE WEBSITE AD


 கூலாய், ஜூலை 17 : கடந்தாண்டு கூலாய் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் 18 ஆலயங்களுக்கும், இந்திய அரசு சாரா இயக்கங்களுக்கும் மொத்தம் ரி.ம 97,000 ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

 முழுமையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்கள் இத்தொகுதியின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர், அவை அங்கீகரிக்கப்பட்டதாக அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ நீ சிங் தெரிவித்தார்.

 இத்தொகுதியின் கீழ் பதிவு பெற்ற ஆலயங்கள் முறையான ஒதுக்கீட்டைப் பெற, விண்ணப்பங்களை கூலாய் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும், கூலாயில் உள்ள ஆலயங்களுக்கான முறையான ஒதுக்கீட்டைத் தொடர்ந்து  தான் வழங்குவேன் என்றும் அவர் உறுதி அளித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *