எதிர்கால வெற்றிகள் சிறப்பாக அமையட்டும்! - SPM மாணவர்களுக்கு டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் வாழ்த்து!

top-news
FREE WEBSITE AD

SPM தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டுக்கான SPM தேர்வில் சிறந்த அடைவுநிலையைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்களின் புதல்வரும், மலர் டிவியின் தலைமை நிர்வாகியுமான டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சிறப்பான அடைவுநிலையைப் பெற்ற நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது எதிர்கால வெற்றிகள் சிறப்பாக அமையட்டும் என்றும்,  அத்தகைய மாணவர்களின் முன்னேற்றத்திற்கான முன்னெடுப்புகளையும் ஓம்ஸ் அறவாரியம் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SPM தேர்வு எழுதிய அத்தனை மாணவர்களையும் பாராட்டுவதோடு, அவர்களின் முயற்சிக்கும், மென்மேலும் அவர்கள் சிறப்புறவும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக டாக்டர் பழனீஸ்வரன் தமது வாழ்த்துச் செய்தியில் பதிவிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *