லாபுவானில் வெள்ளம்! 20-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு!

top-news
FREE WEBSITE AD

லாபுவான், ஆகஸ்ட் 12: நேற்று இரவு பெய்த கனமழையால் இங்குள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

kampung Gersik Baru மற்றும் Jalan Jumidar Buyong ஆகிய பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  அங்கு நீர்மட்டம் ஒரு மீட்டருக்கு உயர்ந்துள்ளது.

தாமான் மஹ்கோத்தா இம்பியானில் உள்ள பல வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தண்ணீர் வீடுகளின் பிரதான அறைகளில் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகினர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் தங்கள் உடமைகளை உயரமான பகுதிகளுக்கு கொண்டு செல்ல உதவியதாக லாபுவான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குனர் அப்துல் ரஹ்மான் அலி தெரிவித்தார்.

இந்நிலையில், ampung Bebuloh Daratடில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஒரு வீடு பாதிக்கப்பட்டது.

வானிலை சீரற்றதாக இருப்பதால், குடியிருப்பாளர்கள், குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள், விழிப்புடன் இருக்குமாறு அப்துல் ரஹ்மான் கேட்டுக் கொண்டார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *