உலுதிராம் துப்பாக்கிச்சூடு சம்பவம்... இரு மாணவர்கள் விடுவிப்பு!

top-news
FREE WEBSITE AD


கடந்த வாரம் உலு திரம்  காவல் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உயர்கல்வி நிறுவன மாணவர்கள் இருவர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

அட்டர்னி ஜெனரல் அறையின் (ஏ-ஜிசி) அறிவுறுத்தல்களுக்கு இணங்க இரண்டு மாணவர்களும் விடுவிக்கப்பட்டதாக ஜோகூர் காவல்துறை தலைமை ஆணையர் எம் குமார் தெரிவித்தார்.

உலு திராம் காவல்நிலையத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைக்காக மே 17ஆம் தேதி தடுத்து வைக்கப்பட்டிருந்த 22 மற்றும் 21 வயதுடைய இரு மாணவர்களும் விடுவிக்கப்பட்டதை ஜோகூர் போலீஸார் உறுதிப்படுத்தினர்.

 

இருப்பினும், சந்தேக நபரின் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் மீதான விசாரணை இன்னும் தொடர்கிறது, ஏனெனில் அவர்களின் காவல் மே 24 அன்று முடிவடைகிறது  என்று எம்.குமார் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *