MACC என்னையும் கண்காணிக்கிறது! ANWAR பகிரங்கம்!

top-news
FREE WEBSITE AD

ஆட்சியில் இருந்தவர்களும் ஆட்சியில் இருப்பவர்களும் லஞ்ச உழல் தடுப்பு ஆணையமான MACC ஐ கண்டு பயப்பட வேண்டாம் என பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர்களை மட்டுமே MACC விசாரிக்கிறது. MACC அனைவரையும் கண்காணிக்கிறது. என்னையும் உட்பட என பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.

பிரதமராக MACC இன் எந்தவொரு விசாரணையிலும் தாம் தலையிடவில்லை என்றும், இவர்களை விசாரியுங்கள், அவர்களை விசாரியுங்கள் என தாம் வலியுறுத்தியதில்லை என பிரதமர் அன்வார் தெரிவித்தார். ஒருவர் மீது வரி ஏய்ப்பு, வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு, அரசாங்க மானியத்தை இடைத்தரகர்கள் மூலமாகப் பெறுவது என MACC க்குப் பெறப்படும் ஆதாரப்பூர்வமானப் புகார்களைக் கொண்டு MACC சம்மந்தப்பட்டவர்களை விசாரிக்கிறது என பிரதமர் அன்வார் விளக்கமளித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *