MADANI அரசு மக்களாட்சிக்கு எதிரானது! - மகாதீர் குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அன்வாரின் மடானி அரசு செயல்படுகிறது என முன்னாள் பிரதமர் Mahathir குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரைப் பற்றி விமர்சித்தால் அவர்களை 3R குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிப்பது தான் அன்வார் சொன்ன REFORMASI? என Mahathir கேள்வி எழுப்பியுள்ளார்.

மடானி ஆட்சியை விமர்சிக்கும் முன்னாள் அமைச்சர்கள் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC இன் விசாரணை வலைக்குள் தள்ளப்படுகின்றனர். லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் மூலமாக அவர்கள் அச்சுறுத்துகிறார்கள் என மகாதீர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையான்மைக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவிக்க கூடாது என்பதைத் தாம் ஏற்பதாகவும் ஆனால் ஆட்சியை விமர்சித்தாலே அவர்கள் மீது தேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்துவது என்ன மாதிரியான ஆட்சி? மடானி ஆட்சி, மக்களாட்சியே இல்லை என மகாதீர் சாடியுள்ளார்! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *