சிங்கப்பூருக்கு அடிமையாகும் மலேசியா! - மகாதீர் சீற்றம்!

top-news
FREE WEBSITE AD

மலேசியா நாளுக்கு நாள் சிங்கப்பூருக்கு விலை போவதாகவும் இது நீடித்தால் சிங்கப்பூருக்கு மலேசியா முழுமையாக அடிமையாகும் என முன்னாள் பிரதமர் மகாதீர் குற்றம்சாட்டியுள்ளார். மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு நாளுக்கு 40000 க்கும் மேற்பட்டவர்கள் வேலைக்காகப் பயணிப்பதால் RTS Link எனப்படும் விரைவு போக்குவரத்து திட்டத்தைச் சிங்கப்பூர் முன்னெடுப்பதை மலேசியா வரவேற்றிருக்கிறது. இதனால் மலேசியா எந்தவொரு முதலீடும் செய்யாமல் பராமரிப்புக்கு மட்டும் போக்குவரத்திலிருந்து பெறப்படும் லாபத்தில் ஒரு பங்கு மலேசியாவுக்குக் கிடைக்கும் என்பதால் மலேசிய அரசாங்கம் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த நிலையில் இது மலேசியாவுக்குத் தேவையற்ற ஒரு திட்டம் என MAHATHIR வலியுறுத்தினார்.

இதனால் மலேசியவில் வேலை வாய்ப்புத் திட்டங்கள் குறைந்து பெரும்பாலான மலேசியர்கள் சிங்கப்பூரில் பணியாற்றும் நிலை உருவாகும் நிலைக்கு தள்ளப்படும் என மகாதீர் எச்சரித்துள்ளார். இது போன்று முதலீடுகள் இல்லாமல் பெறும் லாபம் எதிர்காலத்தில் மலேசியாவை அடிமையாக்கும் நிலைக்கும் கொண்டு செல்லும் என மகாதீர் எச்சரித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *