சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தினால் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 16,

சாலையின் ஓரத்தில் போக்குவரத்துக்கு நெரிசலை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை நிறுத்தினால் சம்மந்தப்பட்ட வாகனம் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என செப்பாங் நகராண்மைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நேற்று மாலை செப்பாங்கில் உள்ள 7 முதன்மைச் சாலைகளில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகச் செப்பாங் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாகப் பயனர்களிடமிருந்து புகார் பெறப்பட்டதைத் தொடர்ந்து இச்சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் செப்பாங் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.

SMART SELANGOR செயலியில் சிலாங்கூர் முழுமையும் வாகனம் நிறுத்துமிடங்கள் அடையாளம் காணப்படுவதாகவும் செயலியைப் பயன்படுத்தி அருகாமையில் வாகனத்தை நிறுத்தி PARKING கட்டணத்தைச் செலுத்தும்படியும் செப்பாங் நகராண்மைக் கழகம் வலியுறுத்தியது. பறிமுதல் செய்யப்பட்ட 8 வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒவ்வொரு நாளும் செப்பாங் நகராண்மைக் கழகம் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *