காயங்களுடன் கால்வாயில் ஆடவர் உடல்!

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், ஆகஸ்ட் 24: சிரம்பான், பெக்கான் லாமா நீலாயில் உள்ள ஒரு கடையின் பின்புறம்  கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் உடல் கால்வாயில்  கண்டெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் 30 வயதுக்கு இடைப்பட்ட வெளிநாட்டவர் என்று நம்பப்படுவதாக சிரம்பான் போலீஸ் தலைவர் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.

இறந்துகிடந்தவரின்  தலை மற்றும் உடலின் பல பாகங்களில் காயம் காணப்பட்டதாக  அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

காணாமல் போன குடும்ப உறுப்பினர் அல்லது அறிமுகமானவர்கள் யாராவது இருந்தால் காவல்துறையில் புகார் அளிக்குமாறு அவர் வலியுறுத்தினார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *