சர்ச்சையான மாரான் கோயில் தேர்தல்! காவல் நிலையத்தில் வாக்கு பெட்டி!

top-news
FREE WEBSITE AD

மலேசியாவின் குறிப்பிடத்தக்க முருகன் ஆலயமான மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தின் நிர்வாகத் தேர்தல் நேற்று மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வாண்டுக்கானத் தேர்தலில் நடப்புத் தலைவர் டத்தோக் தமிழ்ச்செல்வத்தை எதிர்த்து முன்னாள் தலைவர் ராமன் போட்டியிட்டார்.  செல்வச் செழிப்புடனான கோயிலாகத் திகழும் மாரான் கோயிலில் ஊழல் நிறைந்திருப்பதாகவும் நிர்வாக முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகவும் முன்னதானக் காவல்துறையின் புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில். இவ்வாண்டு தேர்தல் காவல் அதிகாரிகளின் பாதுகாப்புடன் நடத்தப்பட்டதாக அறியப்படுகிறது. 

இந்நிலையில் நடப்புத் தலைவர் 206 வாக்குகள் பெற்ற நிலையில்  எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் தலைவர் ராமன் 250 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். ஆதரவாளர்களில் சிலர் மீண்டும் வக்குகள் எண்ணப்பட வேண்டும் என Recounting கேட்க, அப்போது தான் 15 வாக்குகள் கள்ள வாக்குகள் போடப்பட்டிருப்பது அறியப்பட்டது. கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பைக் காவல் அதிகாரிகள் சமர்சம் செய்தும், நிலைமை கையை மீறி போனதாகவும், வாக்கு பெட்டியைப் பாதுகாப்பாகக் காவல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இரு அணியின் ஆதரவாளர்களுக்கும் சர்ச்சை ஏற்பட்டதும் வாக்குப்பெட்டியை மாரான் காவல் நிலையத்தில் வைத்து தற்காலிகமாக இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *