பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நிலை அறிந்து செய்திகள் வெளியிடுங்கள்! - FAHMI FADZIL வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

Masjid Indiaவில் ஏற்பட்ட நில அமிழ்வில் விழுந்து காணாமல் போன 48 வயது Vijayaletchumy தொடர்பானச் செய்திகளை வெளியிடும் முன் கவனம் கொள்ள வேண்டும் என தொடர்பு அமைச்சின் அமைச்சர் Fahmi Fadzil கேட்டுக்கொண்டார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மனம் நோகும்படியானச் செய்தியைத் தவிர்க்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். பாதிக்கப்பட்டவரின் நிலைமையை நாங்கள் புரிந்துக்கொண்டிருப்பது போல செய்தியாளர்களும் புரிந்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Pantai Dalam கழிவு நீர் சுத்திகரிப்பு ஆணையத்தில் Vijayaletchumyஐ தேடும் பணியைப் பார்வையிட்ட Lembah Pantai நாடாளுமன்ற உறுப்பினருமான Fahmi Fadzil நிலத்தடி குழாய் நீர் இறுதியாக Pantai Dalam கழிவுத் தொட்டியில் வந்தடைவதால் இங்கேயும் மீட்புப்பணிகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *