மெட்ரிக்குலேசனில் 2500 இடங்கள்! அதுமட்டுமே ஒரே தீர்வு! – SENATOR SIVARAJ

top-news
FREE WEBSITE AD

Matriculation விவகாரம் தொடர்பாகப் பிரதமர் அன்வார் நேற்று அறிவித்துள்ள நிலையில் 10 % விழுக்காடு Matriculation இடத்தில் சீன மாணவர்கள் அதிகமாக இருப்பதால் இந்திய மாணவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என செனட்டர் சிவராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்த விவகாரம் இந்தியர்களின் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் இருப்பதை ஒற்றுமை அரசு உணர வேண்டும் என செனட்டர் சிவராஜ் கேட்டுக் கொண்டார். முன்னதாக 10% Matriculation இடம் BUMIPUTERA அல்லாதவர்களுக்காக ஒதுக்கப்பட்டாலும் அதில் அதிகமாகச் சீன மாணவர்கள் தேர்வாகுவதைப் புள்ளி விவரங்கள் காட்டுவதாக அவர் தெரிவித்தார். இதற்கு ஒரே தீர்வு இந்திய மாணவர்களுக்கென 2500 Matriculation இடங்களை வழங்க வேண்டும் என செனட்டர் சிவராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது கோரிக்கையை அரசாங்கம் ஏற்று உடனடி நடவடிக்கையை எடுக்கும் என தாம் நம்புவதாகச் செனட்டர் சிவராஜ் தெரிவித்தார்,

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *