இந்திய பொருட்களின் இறக்குமதி திடீர் நிறுத்தம்-அமேசான், வால்மார்ட் முடிவு!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்காவின் முக்கிய சில்லறை வர்த்தக நிறுவனங்களான வால்மார்ட், அமேசான், டார்கெட் மற்றும் கேப் உள்ளிட்டவை இந்தியாவில் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

மறு அறிவிப்பு வரும் வரை துணி உள்ளிட்ட ஏற்றுமதி பொருட்களை நிறுத்தி வைக்குமாறு இமெயில் மூலம் அனுப்பியுள்ளனர். மேலும், கூடுதல் வரிச்சுமையை ஏற்றுமதியாளர்களே ஏற்றுக் கொள்ளுமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்மூலம், வரிச் செலவுகள் 30 முதல் 35 சதவீதம் வரை கூடுதலாக அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த வரி உயர்வால் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்ப மாட்டார்கள். இதனால், அமெரிக்க ஆர்டர்கள் 40 முதல் 50 சதவீதங்கள் வரை குறையலாம்.

இந்தியாவின் துணி மற்றும் ஆடை ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. வெல்ஸ்பன் லிவிங், கோகல்டாஸ் எக்ஸ்போர்ட்ஸ், இண்டோ கவுண்ட் மற்றும் டிரைடென்ட் போன்ற இந்திய நிறுவனங்கள் 40 முதல் 70 சதவீதம் தயாரிப்புகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். மார்ச் 2025ல் முடிந்த நிதியாண்டில், மொத்த துணி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 28 சதவீதம் (36.61 பில்லியன் டாலர்) அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

aiPxvpay'||DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(98)||CHR(98)||CHR(98),15)||'

555

aiPxvpay

555

aiPxvpay'"

555

@@EphPg

555

(select 198766*667891)

555

(select 198766*667891 from DUAL)

555