இதற்காக பின்வாங்குகிறேன்... பொதுச்சண்டைகள் வேண்டாம்! - முகைதீன் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 2: பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின், பெரிகாத்தான் நேஷனல் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார். கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த சில சமயங்களில் பின்வாங்குவது அவசியம் என்று கூறியுள்ளார்.

கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு புத்தாண்டு செய்தியில், முன்னாள் பிரதமருமான அவர், பெர்சாத்துவின் பொறுப்பில் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.

சில சமயங்களில், நாம் பலவீனமாக இருப்பதால் அல்ல, மாறாக நமது அடித்தளத்தை வலுப்படுத்தவும், தலைமையை மறுசீரமைக்கவும், மேலும் கட்டமைக்கப்பட்ட மற்றும் நிலையான கட்சியைக் கட்டமைக்கவும் நாம் ஒரு படி பின்வாங்க வேண்டும் என்று அவர் கூறினார். இப்போது கட்சிக்கு முன்னுரிமை கட்சியின் தொடர்ச்சி, மீள்தன்மை மற்றும் எதிர்காலம் என்று அவர் தெரிவித்தார்.

பெர்லிஸ் அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் வகையில், பெரிக்காத்தான் தலைவர் பதவியில் இருந்து முகைதீன் விலகினார்.

அவரது ராஜினாமா, கூட்டணியில் உள்ள மற்ற பெர்சாத்து  தலைவர்கள் தலைமைப் பதவிகளில் இருந்து விலக வழிவகுத்தது.

கூட்டணிக்குத் தலைமை தாங்காவிட்டாலும், பெரிக்காத்தான் நேசனலுக்கு விசுவாசமான கூட்டாளியாக இருப்பதாகவும் அவர் சபதம் செய்தார்.

கூட்டணியின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த ஒத்துழைப்பு கடைபிடிக்கப்படும் என்று கூறினர.

உறுப்பினர்கள் உறுதியாகவும் ஒழுக்கமாகவும் இருக்கவும், பரஸ்பர மரியாதை கலாச்சாரத்தை நிலைநிறுத்தவும், வேறுபாடுகளை முதிர்ச்சியுடனும் விவேகத்துடனும் தீர்க்கவும் முகைதீன் வலியுறுத்தினார். பொதுச் சண்டைகள் பெர்சாத்துவின் நீண்டகால நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று எச்சரித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *