சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு சந்திப்பு! - அன்வார் பதிவு

top-news
FREE WEBSITE AD

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்தார்.

இன்று காலை புகழ்பெற்ற இந்திய இசையமைப்பாளரும் பாடகருமான சகோதரர் ஏ.ஆர். ரஹ்மானுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்ததாக பிரதமர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் துறை குறித்து தங்கள் உரையாடல் அமைந்ததாக பிரதமர் பதிவிட்டுள்ளார்.

டிஜிட்டல் அம்சங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பாகப் பேசியதாகவும், தற்போது சூஃபி இசையை ஆராய்ந்து வருவதாகவும் ரஹ்மான் தம்மிடம் பகிர்ந்துகொண்டதாக பிரதமர் தெரிவித்தார்!

 

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *