அவசரமாகத் தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்! - ராணுவ அதிகாரிகள் மூவர் காயம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 28: ஜோகூர், குளுவாங்கில் இரவு நேர வான் பயிற்சியின் போது M81-11 (Agusta L109H) ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதில் மூன்று ராணுவ அதிகாரிகள் காயமடைந்தனர்.

இன்று அதிகாலை 1.35 மணியளவில் கெம் மஹ்கோட்டா குளுவாங்கில் உள்ள இராணுவ விமான அடிப்படை அதிகாரி பாடநெறியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

விமானம் முகாமின் ஓடுபாதையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் ஹெலிகாப்டர் பயிற்றுவிப்பாளர், ஒரு பாடநெறி பங்கேற்பாளர் மற்றும் ஒரு குவார்ட்டர் மாஸ்டர் அடங்கிய மூன்று பணியாளர்கள் இருந்தனர்.

அனைத்து பணியாளர்களும் சுயநினைவுடன் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு முதுகெலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக குளுவாங்கில் உள்ள என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *