மெஸ்ஸியின் ஆட்டத்தால் இன்டர் மியாமி அபார வெற்றி

top-news

நியூயார்க், செப். 25-

செய்தி-வெற்றி மைந்தன்

இன்டர் மியாமியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, நியூயார்க் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல்களை அடித்து, ஒரு கோலுக்கு உதவியைச் செய்து, தனது அணியை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வைத்தார். இந்த அபார வெற்றியின் மூலம் இன்டர் மியாமி, எம்எல்எஸ் கோப்பை அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

இந்த வெற்றி, மெஸ்ஸியை இந்த சீசனின் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு உயர்த்தியுள்ளது. அவர் 23 போட்டிகளில் 24 கோல்கள் அடித்து, டெனிஸ் பவுங்காவை (22 கோல்கள்) பின்னுக்குத் தள்ளினார்.

முதல் கோல் 43-ஆவது நிமிடத்தில் பால்டசார் ரோட்ரிக்ஸ் மூலம் கிடைத்தது, இதற்கு மெஸ்ஸியின் சிறப்பான பாஸ் உதவியது. பின்னர், 74-ஆவது நிமிடத்தில், செர்ஜியோ புஸ்கெட்ஸின் உதவியைப் பெற்ற மெஸ்ஸி, அற்புதமான முடிவுடன் இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். மூன்று போட்டிகள் தடையை முடித்து மீண்டும் களமிறங்கிய லூயிஸ் சுவாரஸ், பெனால்டி மூலம் மூன்றாவது கோலை அடித்தார். இறுதியாக, 86-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி மற்றொரு அசத்தலான கோலை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *