கினபாத்தாங்கான் நாடாளுமன்றம், லாமாக் சட்டமன்ற இடைத்தேர்தல்: SPR சிறப்புக் கூட்டம்

top-news

புத்ராஜெயா, டிச. 16-

மலேசியத் தேர்தல் ஆணையம் (SPR) இன்று (டிசம்பர் 16, 2025) காலை 10 மணிக்கு சிறப்புக் கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டம் சபா மாநிலத்தில் உள்ள கினபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதி, லாமாக் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் (PRK) தொடர்பான முக்கிய தேதிகளையும் ஏற்பாடுகளையும் தீர்மானிக்கிறது.

இக்கூட்டத்திற்கு SPR தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹாருன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் தேர்தல் ரிட் வெளியீட்டு தேதி, வேட்புமனு தாக்கல் நாள், வாக்குப்பதிவு நாள், பயன்படுத்தப்படும் வாக்காளர் பட்டியல், பிற ஏற்பாடுகள் ஆகியவை விவாதிக்கப்படுகின்றன.

கூட்டத்தில் SPR துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷாரோம், செயலாளர் டத்தோ கைருல் ஷாஹ்ரில் இட்ரூஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டம் முடிந்த பிறகு SPR செய்தியாளர் சந்திப்பு நடத்தி, இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *