நான் உணர்ச்சிவசப்படுகிறேனா?! - ரஃபிஸி ஆதங்கம்

top-news
FREE WEBSITE AD

 கோலாலம்பூர், ஜூன் 18: பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரஃபிஸி ரம்லி, ஒரு பிரச்சினையை விவாதிக்கும்போது தனக்கு இருக்கும் ஆர்வத்தை மற்றவர்கள் பெரும்பாலும், தாம் உணர்ச்சிவசப்படுவதாகத் தவறாகப் புரிந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் பெரும்பாலும் தனிப்பட்ட உணர்ச்சிகளை உணர்ச்சிவசப்பட்ட வாதங்களுடன் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். தம்மைப் பொருத்தவரை ஒரு விஷயத்தை வாதிட்டு முடித்த பிறகு, தாம் எதையும் உணரவே இல்லை என்பதுதான் உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் என்பது ஒரு வேலை. சிலர் அரசியல் பதவிகளை வெல்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்; எனக்கு, அது வேலையில் ஒரு புதிய பதவியைப் பெறுவது போன்றது என்று அவர் X  பதிவில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

தனது வாழ்க்கையில் உயர்ந்த மற்றும் மோசமான சம்பவம் என்றால், மகனின் பிறப்பு, தந்தையுடன் ஹஜ் செய்தல் மற்றும் நெருங்கிய நண்பர்களில் ஒருவரின் மரணம் போன்ற தனிப்பட்ட விஷயங்கள்தான் என்று அவர் கூறினார்.


Bekas Menteri Ekonomi Rafizi Ramli menjelaskan minatnya dalam perbincangan sering disalah tafsir sebagai emosi. Beliau anggap politik hanya kerja, bukan emosi. Pengalaman hidup paling bermakna baginya ialah kelahiran anak, haji bersama ayah, dan kehilangan sahabat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *