பல்லடம் அருகே உள்ள முருகன் கோவிலில் நடந்த அதிசயம்!

top-news
FREE WEBSITE AD

பல்லடத்தில் தண்டாயுதபாணி கோயில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்கள் உள்ளன. இங்கு சூரசம்ஹாரம் உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக நடக்கும்.

அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள முருகன் கோயிலில் உச்சிகால பூஜை நடந்தது. அப்போது கோயில் கருவறைக்கு ஒரு மயில் வந்தது. அந்த மயில் கோயிலில் பூஜை முடியும் வரை காத்திருந்து தரிசனம் செய்தது. 

 வீடியோவில் முருகனுக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. அதை மக்களை போல் மயிலும் கண் குளிர ரசிக்கிறது. கோயில் குருக்கள் மயிலுக்கும் சேர்த்து தீபாராதனை காட்டுகிறார். பின்னர் எல்லாம் முடிந்ததும் மயில் கிளம்பிவிடுகிறது.

முருகனின் வாகனம் மயில் ஆகும். இதன் காலடியில் கருநாகம் பிடிபட்டிருக்கும். இந்த நாகம் கொல்லப்படுவதில்லை, ஆனால் காலடியில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். நாகத்தின் விஷமானது அதன் உள்ளே இருக்கும் வரை எதுவும் செய்வதில்லை. ஆனால் அது வெளிப்பட்டாலோ அதனால் பேராபத்து.

அது போல்தான் அகந்தையானது உள்ளுக்குள் இருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை. அதை வெளியே காட்டினால் ஆசைகள் ஏற்பட்டு பல கெட்ட விளைவுகள் ஏற்படும். விஷ ஜந்துவாகிய பாம்பு எனும் அகந்தையை காலடியில் போட்டு கட்டுப்படுத்தி புற அழகிலிருந்து கவனத்தை திருப்பினால் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது மயில் வாகனம்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *