போர்வீரர் தினத்தில் மாமன்னர் தம்பதியர்!

top-news
FREE WEBSITE AD


புத்ராஜெயா, ஜூலை 31: மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா இன்று 2024 ஆம் ஆண்டுக்கான போர்வீரர் தின கொண்டாட்டத்துடன் இணைந்து இங்குள்ள டத்தாரான் பஹ்லவான் நெகாராவில் நடைபெற்ற அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதமர் உட்பட அமைச்சர் பெருமக்களும் கலந்துகொண்டனர்.

மேலும், ஆயுதப் படைத் தலைவர் ஜெனரல் டான்ஸ்ரீ முகமது அப்துல் ரஹ்மான் மற்றும் தேசிய காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடீன் ஹுசைன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தேசத்திற்காக ரத்தம் சிந்திய வீரர்களின் நினைவுகள் காட்சிகளாகக் காட்டப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *