இன்று சென்னையில் நடக்கும் போட்டியுடன் எம் எஸ் தோனி ஓய்வா?

top-news
FREE WEBSITE AD

சென்னை மைதானத்தில் நடைபெறும் போட்டியானது சிஎஸ்கே அணிக்கு மிகவும் முக்கியமானது. இந்த போட்டியில் டாஸ் வென்று உள்ள ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டியிலும், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டிகளும் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணியால் பிளே ஆப் சுற்றுக்கு நுழைய முடியும். இதனால் சிஎஸ்கே அணியின் வாழ்வா? சாவா? போட்டியாகவே இது அமைந்துள்ளது.

இதற்கிடையே இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 61 வது லீக் போட்டி எம்.எஸ் தோனியின் கடைசி போட்டியாக அமையும் என ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவி வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டுள்ள ட்விட் வைரலாகி வருகிறது.

அந்த ட்விட்டில் "ஆட்டம் முடிந்த பிறகு அனைவரும் மைதானத்தில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம், எல்லோருக்கும் தேங்க்ஸ்" என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது எம்.எஸ் தோனியின் ஓய்வை உறுதி செய்யும் ட்விட் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *