நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்! - துன் மகாதீர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28: துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி“குட்டி” என்று தம்மைக் குறிப்பிட்டதாகக் கூறி,  அவருக்கு எதிராக மகாதீர்  தொடுத்த வழக்கில் மகாதீர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

இந்நிலையில் வழக்கறிஞர் முகமது ஷாருல்: உங்களுக்கு 10 உடன்பிறப்புகள் உள்ளனர்... யார் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்ப,  அதற்கு மகாதீர் "சயா லா, சயா மசிஹ் ஹிடுப்.  நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன் என்று பதிலளித்தார்.

எனினும் டாக்டர் மகாதீர், அஹ்மத் ஜாஹிட்டின்  குட்டி தொடர்பான  கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தீவிரமான தொனிக்கு மாறினார்.

தனக்கு இந்திய பாரம்பரியம் உள்ளது என்று சொல்ல நான் வெட்கப்படவில்லை, ஆனால், அதற்காக  நான் மலாய் இல்லை என்று அர்த்தம் இல்லை என்று அவர் கூறினார்.

தங்கள் பரம்பரை என்பது தங்கள் குடும்பத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்ட ஒன்றல்ல என்றும் அவர் விளக்கினார்.

இந்த வழக்கு மகாதீரும் இஸ்கண்டாரும் முஸ்லீம் பெயர்களா என்று கேள்வி எழுப்பவில்லை, மாறாக எனது உண்மையான பெயர் தொடர்பான மோசடி குற்றச்சாட்டை முன்வைக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி, அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக அஹ்மத் ஜாஹித் மீது மகாதீர் வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *