நான் பிரதமரா? - சனூசி

top-news
FREE WEBSITE AD

தெமர்லோ, செப் 13: கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி முகமட் நோர், எதிர்காலத்தில் மலேசியாவின் பிரதமராகும் வாய்ப்பை மறுத்துள்ளார்.

தனக்கு அப்படி ஒரு ஆசை இருந்ததில்லை என்று  அவர் கூறினார்.

தான் தயாராக இல்லை என்றும் வேறு யாரையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறி அந்தப்  பேச்சுக்களை நிராகரித்தார்.

நான் ஒரு கட்சிக்காரன், தனிப்பட்ட லட்சியம் எதுவும் வைக்கவில்லை. ஏற்பாடு செய்வதை கட்சிக்கே விட்டு விடுகிறேன் என்று அவர் பதிலளித்துள்ளார்.

கட்சி என்னை ஒரு கிளையை நிர்வகிக்கச் சொல்கிறது, நான் அதைச் செய்வேன், அவர்கள் என்னை ஒரு மாநிலத்தை நிர்வகிக்கச் சொன்னால், நான் கடைப்பிடிக்கிறேன். எனக்கு சுயநலமோ லட்சியமோ இல்லை," என்று கெர்டாவில் கட்சியின் முஸ்லிமாத் (மகளிர் பிரிவு) பொதுக் கூட்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *