PN-ஐ வழிநடத்த பாஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்! பாஸ் வலியுறுத்து
- Shan Siva
- 13 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 13: பெரிக்காத்தான் நேஷனல் (PN) தலைவராக இருந்த டான் ஸ்ரீ முகைதீன் யாசின் ஜனவரி 1 முதல் பதவி
விலகியதைத் தொடர்ந்து, PN-ஐ வழிநடத்த பாஸ் (PAS) கட்சிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என பாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பாஸ் தகவல் பிரிவுத்
தலைவர் அஹ்மத் ஃபாத்லி
ஷாரி, 16-வது பொதுத்
தேர்தல் (GE16) முன்னேற்பாடுகளுக்காக கூட்டணியை வழிநடத்த
வேண்டிய பொறுப்பு பாஸுக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இன்று தனது ஃபேஸ்புக்
பதிவில், பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், முகைதீன் விலகலை ஏற்றுக்கொண்ட பெர்சாத்து உச்சமன்றத்தின் முடிவை
வரவேற்றார்.
PN தலைமைப்
பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்ற முகைதீனின் விருப்பத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொண்ட
பெர்சாத்துவின் முடிவு மிகவும் சிறப்பானது.
16 வது பொதுத் தேர்தலைச்
சந்திக்க PN-ஐ வழிநடத்த
பாஸுக்கு அனுமதி வழங்குங்கள். நாங்கள் எழுந்து புத்ராஜெயாவை நோக்கி பயணிப்போம் எனக் கூறினார்.
முன்னதாக, நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் தனது
விளக்கங்களை முன்வைத்ததன் பின்னர், கொள்கை மற்றும் பொறுப்பு அடிப்படையில் முகைதீன் ராஜினாமா முடிவை கவுன்சில் மதித்து
ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
அந்தக்
கூட்டத்தில் GE16-க்கான PN-ன் திசை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும், அதில் மிதமான, முன்னேற்றமான மற்றும் மக்கள்முகக்
கொள்கைகள் மீது கவனம்
செலுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், PN கூட்டணிக்குள் பெர்சாத்து ஒரு கொள்கைநிலை கொண்ட, விசுவாசமான பங்குதாரராகவே தொடரும் என்றும், கூட்டணியின் நிலைத்தன்மை மற்றும் வலிமைக்காக ஒத்துழைப்பு
பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, பெர்லிஸ் அரசியல் நெருக்கடி தொடர்பாக பெர்சாத்து கூட்டணியைத் துரோகம் செய்ததாக
கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கவுன்சில் வருத்தம் தெரிவித்ததுடன், மாநிலத் தலைமைக் குழப்பங்களில் பெர்சாத்துவுக்கு
எந்தப் பங்களிப்பும் இல்லை என மறுத்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



